Powered By Blogger

Sunday 4 March 2012

யார் தொலைத்தார் நிம்மதியை


யார் தொலைத்தார்
இந்த நிம்மதியை
ஏன் தேடுகிறீர்
தொலையாத நிம்மதியை

நிம்மதி
அது உனக்குள்ளே இருக்கு

கவலைகள் தேங்கி இருக்குமாயின்
சலனங்கள் மூடி கிடக்குமாயின்
ஆசைகள் அலைமோதித் திறியுமாயின்
மனம் எப்படி நிம்மதியை உணரும்

மறந்துவிடாதே
உனக்கு கிடைத்ததே அதிகம் என்பதை
கவலை, சலனம், ஆசை இவை
அனைத்தும் மரணத்தின் ஓசை

மனதின் குப்பைகளை அகற்றிவிட்டு வாருங்கள்
அப்போது தெரியும் பயணத்தின் தூரம்
பயணத்தின் வழி காட்சிகளின் இன்பம்

யார் தொலைத்தார் நிம்மதியை
முப்பொழுதும் தேடிக்கொண்டிருக்க!!

!!~ இரா. தமிழரசு ~!!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.