யார் தொலைத்தார்
இந்த நிம்மதியை
ஏன் தேடுகிறீர்
தொலையாத நிம்மதியை
நிம்மதி
அது உனக்குள்ளே இருக்கு
கவலைகள் தேங்கி இருக்குமாயின்
சலனங்கள் மூடி கிடக்குமாயின்
ஆசைகள் அலைமோதித் திறியுமாயின்
மனம் எப்படி நிம்மதியை உணரும்
மறந்துவிடாதே
உனக்கு கிடைத்ததே அதிகம் என்பதை
கவலை, சலனம், ஆசை இவை
அனைத்தும் மரணத்தின் ஓசை
மனதின் குப்பைகளை அகற்றிவிட்டு வாருங்கள்
அப்போது தெரியும் பயணத்தின் தூரம்
பயணத்தின் வழி காட்சிகளின் இன்பம்
யார் தொலைத்தார் நிம்மதியை
முப்பொழுதும் தேடிக்கொண்டிருக்க!!
!!~ இரா. தமிழரசு ~!!
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.