Powered By Blogger

Sunday 4 March 2012

நட்ட நடு நிசியினிலே
சுற்றும் பனி படர
சற்றே தொலைவினிலே
காற்றும் நெருடிவர

கலங்கிய பொய்கையிலே
நிலவின் முகம் சிரிக்க
கொஞ்சும் தமிழிடத்தில்
உன் மௌனம் சண்டையிட

மலரெடுத்து முகிலெடுத்து
கொஞ்சம் நடையெடுத்து
இருளின் நார் எடுத்து
நாணம் சரம் தொடுத்து

உன் காதலைச் சொல்கயிலே
என் கண்ணீர் கவிதைகளானது
கனவுகள் நிஜங்களானது
அன்றிரவு நம் இருவருக்கானது

!!~ இரா. தமிழரசு ~!!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.