நட்ட நடு நிசியினிலே
சுற்றும் பனி படர
சற்றே தொலைவினிலே
காற்றும் நெருடிவர
கலங்கிய பொய்கையிலே
நிலவின் முகம் சிரிக்க
கொஞ்சும் தமிழிடத்தில்
உன் மௌனம் சண்டையிட
மலரெடுத்து முகிலெடுத்து
கொஞ்சம் நடையெடுத்து
இருளின் நார் எடுத்து
நாணம் சரம் தொடுத்து
உன் காதலைச் சொல்கயிலே
என் கண்ணீர் கவிதைகளானது
கனவுகள் நிஜங்களானது
அன்றிரவு நம் இருவருக்கானது
!!~ இரா. தமிழரசு ~!!
சுற்றும் பனி படர
சற்றே தொலைவினிலே
காற்றும் நெருடிவர
கலங்கிய பொய்கையிலே
நிலவின் முகம் சிரிக்க
கொஞ்சும் தமிழிடத்தில்
உன் மௌனம் சண்டையிட
மலரெடுத்து முகிலெடுத்து
கொஞ்சம் நடையெடுத்து
இருளின் நார் எடுத்து
நாணம் சரம் தொடுத்து
உன் காதலைச் சொல்கயிலே
என் கண்ணீர் கவிதைகளானது
கனவுகள் நிஜங்களானது
அன்றிரவு நம் இருவருக்கானது
!!~ இரா. தமிழரசு ~!!
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.