Powered By Blogger

Sunday 25 March 2012

உன் வேலையைப் பார்

கழுகைப் போல் பார்வை கூரில்லை
நாயைப் போல் மூக்கும் உணர்வில்லை
ஆனால் எல்லாம் தெரிந்தது போல்
எங்கோ இருப்பவனை விமர்சிக்கிறாய் ஏன்?

உன்னை நீ அறிந்ததுண்டா
அறம் செய்து வாழ்ந்ததுண்டா
வீணான வெட்டி வேலை உனக்கு
மூச்சு முட்ட குறை சொல்வதெதற்கு?

உன் தங்கைக்குத் தங்கத்தில்
தோடு வாங்க வக்கில்லை
அடுத்தவள் காதின் தோடு
அழகாய் இல்லை என்கிறாயே

சொந்த வேலை உனக்கு
வாழ் நாள் முழுக்க இருக்கு
இன்னும் முப்பதோ நாற்பதோ வருடம்தான்
செய்து முடிக்க முடியுமா உன்னால்?

!!~ இரா. தமிழரசு ~!!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.