எங்களைக் காட்டிக்கொடுக்காதீர்!!
அரசியல்வாதிகள்
புன்னகை தேசத்து
பூக்கள் நாங்கள்
என்கிறார்கள்
எங்களைப் பெற்றவர்கள்
என்னில் இருக்கும்
எனதுயிர் சுவாசம்
என்கிறார்கள்
எங்கள் நண்பர்கள்
நிஜத்தில் வாழும்
நிழல்கள் போல
என்கிறார்கள்
ஆனால் நாங்களோ
காமத்தில் பிறந்த
கருமம் என்பதைவிட
வேறென்ன சொல்ல முடியும்
எங்கள் குறல்
நல்ல உள்ளங்களுக்கு
கேட்குதோ இல்லையோ
முதலாளிகள் காதுகளுக்கு எட்டி
எல்லை தாண்டி போகாது
எட்டி உதைக்கின்றனர்
எங்களைக் காப்பாற்ற வேண்டாம்
வேலைக்கு இப்படி ஒரு
குழந்தை உண்டு என்பதை
காட்டிக்கொடுக்க வேண்டாம்
எங்கள் அன்புமிக்க
தம்பிகளைக் காப்பாற்றுங்கள்!!
!!~ இரா. தமிழரசு ~!!
அரசியல்வாதிகள்
புன்னகை தேசத்து
பூக்கள் நாங்கள்
என்கிறார்கள்
எங்களைப் பெற்றவர்கள்
என்னில் இருக்கும்
எனதுயிர் சுவாசம்
என்கிறார்கள்
எங்கள் நண்பர்கள்
நிஜத்தில் வாழும்
நிழல்கள் போல
என்கிறார்கள்
ஆனால் நாங்களோ
காமத்தில் பிறந்த
கருமம் என்பதைவிட
வேறென்ன சொல்ல முடியும்
எங்கள் குறல்
நல்ல உள்ளங்களுக்கு
கேட்குதோ இல்லையோ
முதலாளிகள் காதுகளுக்கு எட்டி
எல்லை தாண்டி போகாது
எட்டி உதைக்கின்றனர்
எங்களைக் காப்பாற்ற வேண்டாம்
வேலைக்கு இப்படி ஒரு
குழந்தை உண்டு என்பதை
காட்டிக்கொடுக்க வேண்டாம்
எங்கள் அன்புமிக்க
தம்பிகளைக் காப்பாற்றுங்கள்!!
!!~ இரா. தமிழரசு ~!!
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.