Powered By Blogger

Monday 26 March 2012

வித்தியாசம்

போனபொழுதில் அள்ளிக்கொண்டு
பாதியைத் திண்றுவிட்டு முடியாமல்
மீதியை குப்பையிலிட்டவன்
சாப்பிடும் முன் வேண்டினான்
அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம்

ஒருவேளைச் சோற்றுக்கு
என்னென்னவோ பாடுபடும்
ஏழமைவாதிகள் உணவைக்கண்டால்
சொல்லக் கூட நேரமில்லை
அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம்

பணம் படைத்தவன் வேண்டுகிறான்
குறுக்கு வழியானாலும் கடினப்பட்டுச் சேர்த்து
வீட்டில் பூட்டி வைத்திருக்கும்
இறைவா என் பணத்தைக் காப்பாற்று

பணம் இல்லாதவன் வேண்டுகிறான்
நல்ல வழியானாலும் சிறுகச்சிறுகச் சேர்த்து
பணத்தை நிறுவனத்தின் மேல் முதலீடு செய்தவுடன்
இறைவா என் பணத்தைக் காப்பாற்று

!!~ இரா. தமிழரசு ~!!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.