Powered By Blogger

Sunday 4 March 2012

செவ்வியச் சிலை கண்மணியே!

நட்ட நடு நிசியினிலே
ஆழ் துயில் காணும் கண்மணியே
ஈரம் கொண்ட மலரினிலே
தேகம் தான் படுக்க வந்தாயோ

தமிழும் இசையும் சேர்ந்தே பெய்த மழையில்
தேகம் அனைத்தும் நனைந்து வந்த பொன்மணியே
நகமும் சதையும் கொடுத்த கொஞ்ச இடையில்
புறமும் பகையும் மறந்து காதல் கொள்வோம்

பூவிழுந்த சாலையிலே தென்ற்ல் வரும்
பனி இறங்கும் காலையிலே இன்பம் தரும்
மலர் கொடுத்த போர்வையிலே மின்ன மின்ன
துயில் துறப்பாய் கண்மலர்ந்தே மெல்ல மெல்ல

ஒற்றை காலில் நீ காற்றில் ஆட
சற்றே காற்றில் நான் காவியம் பாட
தொடர்வது முடிவதற்கே என்பது மறந்து
முடிவது தொடர்வதற்கே என்று எண்ணுவோம்

!!~ இரா. தமிழரசு ~!!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.