Powered By Blogger

Sunday 25 March 2012

வீரனாய் மரிப்போம்

மரணப் படுக்கையில் தான்
பகையாலி நண்பனாகிறான்
கெட்டவை மறக்கிறான்
மறந்தவை நினைக்கிறான்

மரணத்தின் மீது
கொண்ட பயம்
வாழும் போது
தர்மத்தின் மீதில்லை

வீரன் மட்டுமே இரண்டையும்
ஒன்றாகவே பார்க்கிறான்
ஆக மனிதனாய் பிறந்து
வீரனாய் மரித்தல் சிறந்ததுதானே

தட்டிக் கேட்கும் வரை
நீ அடிமைதான் இங்கே
வாயைத் திறந்து பேசும் வரை
மற்றவன் உனக்கு மேதைதான்

!!~ இரா. தமிழரசு ~!!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.