Powered By Blogger

Sunday 4 March 2012

நடை போடு

கனவுகள் ஆயிரம் வருகின்றன
ஒன்று கூட பலிப்பதில்லை
இருப்பினும் கனவு காண்பதை விடுவதில்லை

ஆனால் ஒன்று மட்டும் உண்மை...
இன்றைய பொழுது முடியும்
நாளை பொழுது விடியும்

கனவுகளை எண்ணி புலம்பாமல்
நினைவுகளை எண்ணி வருந்தாமல்

அராஜக மண்ணில்
வீரநடை போடு
எதிர்ப்புகளைக் கடந்து
ராஜநடை போடு
தோல்விகள் அடைந்தால்
தொட்டாச்சினுங்கி போல் சினுங்காதே
குதிரையைப்போல் எழுந்தோடு!!

!!~ இரா. தமிழரசு ~!!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.