Powered By Blogger

Monday 26 March 2012

எங்கே தர்மம்?

ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள்
கல்வி கற்காத சின்னஞ்சிறு பிஞ்சுகள்
கூரையில்லா வீடு நிறந்தரமில்லா கூடு
கூண்டோடு அழிக்கப்பட்டதே
இதில் எங்கே தர்மம் தலைகாக்கப்பட்டது

மாலையிடும் வயதில் பெண்கள்
மானபங்கம் செய்து கொல்லப்பட்டதே
காக்கைகள் மேய்கிறப் பிணங்களாய்
ஒன்றின் மேல் ஒன்றாய் எறியப்பட்டதே
இதில் எங்கே தர்மம் தலைகாக்கப்பட்டது

சினைகொண்ட விலங்கை வேட்டையிடுதல்
வேட்டை விதிக்கு முறனானதே
எங்கள் அரசர்கள் கட்டிக்காத்த கொள்கை
கற்பிணிகளை இலங்கையில் வேட்டையிட்டானே
இதில் எங்கே தர்மம் தலைகாக்கப்பட்டது

உன் பத்தாயிரம் இராணுவர்களை
மன்னித்து விட்ட கதை மறந்தாயா
மண்டியிட்டு அழுதாலும் நீ
புத்தர் தேசத்தில் மன்னிக்கப்படமாட்டாயடா!!

!!~ இரா. தமிழரசு ~!!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.