காண்பவை காட்சியென
கண்களில் சுகம் கண்டேன்
கொள்வது கோளமென
வாழ்வில் சுகம் கொண்டேன்
வாழ்வு சுகமும் ஆன்ம சுகமும்
இன்று இரண்டெனக் கண்டேன்
பல்வேறு சுகமெங்கும் பரவிக் கிடக்க
ஈழத்து சுகமென்பதே சுகமென்றேன்
வீச வேண்டும் ஒரு தென்றல்
எங்கள் தமிழர் தேசத்தில்
கேட்க வேண்டும் ஒரு இசை
எங்கள் தமிழர் தேசத்தில்
வாழ்க தமிழென
என்றொரு தேசிய கீதம்
பாடித் திரிய வேண்டும்
எங்கள் தாய் தமிழ் நாட்டில்
தமிழரைப் போல் வெறிகொண்டான் இல்லை
அவனைப் போல் நெறிகொண்டான் இல்லை
அகில உலக நாடுகளே
அவனைப் போல் வீரம் கொண்டானும் இல்லை
நூற்றாண்டுகள் ஆனாலும்
தனியாது எங்கள் தாகம்
நாடென்ற வீட்டை அடையாது
தீராது எங்கள் தாபம்
!!~ இரா. தமிழரசு ~!!
கண்களில் சுகம் கண்டேன்
கொள்வது கோளமென
வாழ்வில் சுகம் கொண்டேன்
வாழ்வு சுகமும் ஆன்ம சுகமும்
இன்று இரண்டெனக் கண்டேன்
பல்வேறு சுகமெங்கும் பரவிக் கிடக்க
ஈழத்து சுகமென்பதே சுகமென்றேன்
வீச வேண்டும் ஒரு தென்றல்
எங்கள் தமிழர் தேசத்தில்
கேட்க வேண்டும் ஒரு இசை
எங்கள் தமிழர் தேசத்தில்
வாழ்க தமிழென
என்றொரு தேசிய கீதம்
பாடித் திரிய வேண்டும்
எங்கள் தாய் தமிழ் நாட்டில்
தமிழரைப் போல் வெறிகொண்டான் இல்லை
அவனைப் போல் நெறிகொண்டான் இல்லை
அகில உலக நாடுகளே
அவனைப் போல் வீரம் கொண்டானும் இல்லை
நூற்றாண்டுகள் ஆனாலும்
தனியாது எங்கள் தாகம்
நாடென்ற வீட்டை அடையாது
தீராது எங்கள் தாபம்
!!~ இரா. தமிழரசு ~!!
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.