Powered By Blogger

Sunday 25 March 2012

தமிழர் தேசம்

காண்பவை காட்சியென
கண்களில் சுகம் கண்டேன்
கொள்வது கோளமென
வாழ்வில் சுகம் கொண்டேன்

வாழ்வு சுகமும் ஆன்ம சுகமும்
இன்று இரண்டெனக் கண்டேன்
பல்வேறு சுகமெங்கும் பரவிக் கிடக்க
ஈழத்து சுகமென்பதே சுகமென்றேன்

வீச வேண்டும் ஒரு தென்றல்
எங்கள் தமிழர் தேசத்தில்
கேட்க வேண்டும் ஒரு இசை
எங்கள் தமிழர் தேசத்தில்

வாழ்க தமிழென
என்றொரு தேசிய கீதம்
பாடித் திரிய வேண்டும்
எங்கள் தாய் தமிழ் நாட்டில்

தமிழரைப் போல் வெறிகொண்டான் இல்லை
அவனைப் போல் நெறிகொண்டான் இல்லை
அகில உலக நாடுகளே
அவனைப் போல் வீரம் கொண்டானும் இல்லை

நூற்றாண்டுகள் ஆனாலும்
தனியாது எங்கள் தாகம்
நாடென்ற வீட்டை அடையாது
தீராது எங்கள் தாபம்

!!~ இரா. தமிழரசு ~!!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.