Powered By Blogger

Thursday 8 March 2012

வெளிச்சம் வரட்டும்

வெளிச்சம் வரட்டும்

வெள்ளம் வந்து வெட்டவெளி ஆனாலும்
வெள்ளிக்கிழமை அட்டவணை மாறாது
வெந்ததுபோய் நொந்ததுபோய் கிடந்தாலும்
... வெள்ளை வேட்டி உதவிக்கு வராது

கல்வியை சீர்திறுத்தப் போகிறதாம்
திக்குமுக்காடும் முட்டாள் கழகம்
வறுமைக்கு உணவளிக்கப் போகிறதாம்
அன்றே திண்று முடிக்கும் கழகம்

என்ன எழுதி கிழித்தாலும்
இந்த நாடு என்றும் செழிக்காது
விழுங்கி முடித்து ஏப்பமிடும்
பூதங்கள் உள்ளவரை

மாங்கு மாங்கென கத்தினாலும்
அவர்கள் காதுகளுக்கெட்டாது
பொன்னோ பொருளோ பதிலுக்கு
லஞ்சமாகக் கொடுக்கும் வரை

ஏழமை தீர்ப்பேன் உணவு கொடுப்பேன்
தண்ணீர் திறப்பேன் என்பன பிரச்சார நாடகம்
கண் காதுகளை நம்பிக்கெட்டு சாகாமல்
கை காள்களை நம்பி உழை மனம் தளராமல்

மோதிரத்தோடு உனக்கு விரலுமா தொலைந்தது?
இல்லை என்றால் இன்னும் ஒன்று வாங்கு
நம்பிக்கெட்டவர்கள் மதிகெட்டா போனார்கள்?
இல்லை என்றால் மீண்டும் உன்னை நம்பு

!!~ இரா. தமிழரசு ~!!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.