ஊண் உறக்கம் இல்லாமல்
உடல் தேய உழைத்தாலும்
இல்லை ஒரு பயனுமே
இரவோடு மனம் வாடுதே
என்ன கொடுமை இது
வாய்க்கும் வயிறுக்கும்
என்றெண்ணும் போதெல்லாம்
கோபம் வந்து பின் நொந்ததே
மெய்ஞானப் படகில் விஞ்ஞானப் பயணம்
எல்லையில்லா கற்பனையில் வண்ணமில்லா வாழ்க்கை
எமலோகம் ஆனாலும் இதுபோல இராதே
சுயநலக் கிடங்கான இந்த அவலோகமே
எந்நாளும் வருமானம் வேண்டுமென
தன்மானம் இழக்கவைக்கும் இந்த
அவமான வாழ்க்கையை விட்டொழித்து
சிவஞானம் வேண்டுமென மனம் ஏங்குதே
!!~ இரா. தமிழரசு ~!!
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.