செம்மண் சாலையின் நிதமான ஈரம்
என் வற்றாத இளமையை
முற்றாக குடித்த
செம்பனைக்காடும் ரப்பர் தோட்டமும்
சின்னஞ்சிறு வயதில்
தெருவிற்குத் தெரு
கால்கடுக்க நடந்ததும்
இந்த செம்மண் சாலைகளில்தான்
மனமுடைந்த காளையரும் கன்னியரும்
இருக்கி அணைத்த ஆற்றங்கரைத் தென்னைமரம்
தள்ளாத முதுமையில் கிழவிகள் கொத்திய
தோப்பும் துரவுகளும்
வண்ணம் மங்கிய மாலையில்
எதிர்புற வீட்டு வாசலில்
பச்சைப் பந்தல் தோரணம்
மூத்தமகள் பூபெய்திய காரணம்
இப்படியெல்லாம் ஒவ்வொரு கிழமையில்
வெவ்வேறு காட்சிகள் கண்டு இன்புற்ற நான்
இன்று கண்கள் இருந்தும் காட்சிகள் இல்லாத
பட்டணக் கூட்டில் கற்பனை வியாபாரியாய்
!!~ இரா. தமிழரசு ~!!
என் வற்றாத இளமையை
முற்றாக குடித்த
செம்பனைக்காடும் ரப்பர் தோட்டமும்
சின்னஞ்சிறு வயதில்
தெருவிற்குத் தெரு
கால்கடுக்க நடந்ததும்
இந்த செம்மண் சாலைகளில்தான்
மனமுடைந்த காளையரும் கன்னியரும்
இருக்கி அணைத்த ஆற்றங்கரைத் தென்னைமரம்
தள்ளாத முதுமையில் கிழவிகள் கொத்திய
தோப்பும் துரவுகளும்
வண்ணம் மங்கிய மாலையில்
எதிர்புற வீட்டு வாசலில்
பச்சைப் பந்தல் தோரணம்
மூத்தமகள் பூபெய்திய காரணம்
இப்படியெல்லாம் ஒவ்வொரு கிழமையில்
வெவ்வேறு காட்சிகள் கண்டு இன்புற்ற நான்
இன்று கண்கள் இருந்தும் காட்சிகள் இல்லாத
பட்டணக் கூட்டில் கற்பனை வியாபாரியாய்
!!~ இரா. தமிழரசு ~!!

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.